23 வயது யுவதி பேருந்தின் சில்லில் சிக்கி பரிதாபமாக பலி!!

514

யுவதி பரிதாபமாக பலி

கம்பளை – நுவரெலியா வீதியின் பொரலுமங்கட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். அவர் பயணித்த முச்சக்கரவண்டி , சிற்றூர்தியொன்றில் மோதியுள்ளதையடுத்து குறித்த யுவதி வீதிக்கு தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதன்போது , பின்னால் வந்த அரச பேருந்தின் சில்லில் சிக்கி குறித்த யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 23 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ள முச்சக்கரவண்டியின் சாரதி கம்பளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் அரச பேருந்தின் சாரதியும் , சிற்றூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் கம்பளை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.