அவமானம் என கருதி தற்கொலை செய்துகொண்டுள்ள ஒரு பிள்ளையின் தந்தை!!

529

தற்கொலை

பொலநறுவை – தியபெதும – எளிகிம்புலாவெல பகுதியில் நபர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் பிரிதொரு நபரிடம் 25 ஆயிரம் ரூபாவினை கடனாக பெற்றுக்கொண்டதை மீள செலுத்த முடியாது போனமையால் அவமானம் எனகருதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டவர் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.