அவதானம் : வட மாகாணத்தில் நாளை கடும் வெப்பமான காலநிலை!!

799

கடும் வெப்பமான காலநிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், நிழலான இடங்களில் தரித்திருத்துக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், வீட்டிலுள்ள முதியோர்கள் மற்றும் நோயாளிகள் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும். அத்துடன், சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்வதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.