மிரண்டுபோன சாரதி
முச்சக்கரவண்டியில் உயிரிழந்த பெண்ணொருவரை ஏற்றிச் சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாரவிலயில் இருந்து ஹட்டன் நோக்கி உயிரிழந்த பெண்ணை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றமை தொடர்பில் ஹட்டன் பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிக்கோயாவை சேர்ந்த 66 வயதான நோயாளி பெண் ஒருவரை அழைத்து செல்வதாக கூறிய இருவர், சடலம் ஒன்றை கொண்டு சென்றுள்ளனர். மாரவில பிரதேசத்தை சேர்ந்த இருவரே இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
20000 ரூபா வாடகை அடிப்படையில் முச்சக்கரவண்டியை பெற்று மோசடி நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளனர். பெண்ணின் சடலத்தை நோயாளி ஒருவரை அமர வைத்து அழைத்து செல்வதனை போன்று நேற்று காலை டிக்கோயாவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
முச்சக்கர வண்டி சாரதி டிக்கோயா பிரதேச வீடு ஒன்றிற்கு வரும் போது, அந்த வீட்டில் இறுதி அஞ்சலிக்காக ஏற்பாடு செய்திருந்ததனை அவதானித்துள்ளார். இதன் போதே முச்சக்கர வண்டியில் இருப்பது பெண் அல்ல சடலம் என சாரதி அறிந்து கொண்டுள்ளார்.
சடலத்தை வீட்டு உரிமையாளர் பெற்றுக் கொண்டதன் பின்னர் முச்சக்கர வண்டி சாரதி சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.