டிசம்பர் மாத ராசி பலன் -ரிஷபம்!!

427

rishabam

ஐந்தில் வளைந்தால்தான் ஐம்பதிலும் வளைய முடியும் என்பதை அறிந்த நீங்கள், பக்கத்தில் இருப் பவர்களை விட பத்து விரல்களை அதிகம் நம்பு வீர்கள். உங்கள் ராசிக்கு 6ம் வீட்டிலேயே சனியும், ராகுவும் நிற்பதால் கடின மான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். எதிலும் வெற்றி உண்டாகும். தடைகளெல்லாம் நீங்கும். தன்னம்பிக்கை பெருகும்.

உங்கள் ராசிக்கு 8ல் சூரியனும், புதனும் நிற்பதால் அறிஞர்களின் நட்பு கிடைக்கும். மனைவிக்கு இருந்து வந்த மாதவிடாய்க் கோளாறு, கழுத்து வலி, முதுகு வலி நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு.

மகளுக்கு வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. மகனுக்கு இருந்து வந்த முன்கோபம் நீங்கும். என்றாலும் 5ம் வீட்டிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.

பாகப்பிரிவினை விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரன் 9ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்களுடைய அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும்.

எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குருபகவான் சாதகமாக இருப்பதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல் வாதிகள் பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும். கோஷ்டிப் பூசல்கள் மறையும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவீர்கள். நீண்ட நாட்களாக பார்த்து ரசிக்க வேண்டுமென்று நினைத்திருந்த ஊர்களுக்குச் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்கள் உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும்.

உயர்கல்வி மீதிருந்த ஆர்வமில்லாப் போக்கு மாறும்.வியாபாரத்தில் இந்த மாதம் கணிசமாக லாபம் உயரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுக மாவார்கள். கடையை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள்.வேற்றுமதத்தினரால் ஆதாயம் உண்டு. உணவு, மருந்து, கட்டிட வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்கு கூடும். அதிகாரிகளுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

உங்களின் புதுத் திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள்.சிலருக்கு இடமாற்றம் சாதகமாகும். கலைத்துறையினர் உங்களுடைய படைப்புகள் பரவலாக பாராட்டிப் பேசப்படும். பரிசு, பாராட்டு களும் உண்டு.விவசாயிகள் வாய்க்கால், வரப்புச் சண்டையெல்லாம் தீரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 19, 20, 21, 23, 27, 28, 30
ஜனவரி : 5, 6, 7, 8, 10.

சந்திராஷ்டம தினங்கள்: டிசம்பர் 31ம் திகதி மதியம் 1 மணி முதல் ஜனவரி 1 மற்றும் 2ம் திகதி மாலை 3 மணி வரை உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.

பரிகாரம்: சிவனை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.