டிசம்பர் மாத ராசி பலன் – சிம்மம்!!

795

simmam

ஊராரின் தூற்றுதல்களுக்கு செவி சாய்க்காது வாழ்வின் உயரத்தை நோக்கி செல்லும் குணமுடைய நீங்கள், தடைகளை படிக்கட்டுகளாக நினைத்து பயணிப்பவர்கள். உங்களின் பூர்வ புண்யாதி பதியான குருபகவான் லாப வீட்டில் நிற்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 2ம் வீட்டில் நிற்பதால் காரசாரமாகப் பேசுவீர்கள்.

சில நேரங்களில் பேச்சால் நல்லது நடக்கவும் வாய்ப்பிருக்கிறது. பிரச்னைகள் வரவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவலறிந்து பேசுவது நல்லது. சகோதர வகையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். பழைய கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து குடும்பத்தில் உள்ளவர்களை வசைபாடிக் கொண்டிருக்காதீர்கள்.

பார்வைக் கோளாறு வரக்கூடும். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் 6ம் வீட்டில் தொடர்வதால் கணவன் – மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாட்களிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் ராசிநாதன் சூரியன் 5ம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகள் கோபப்படுவார்கள். ஆனால், சூரியனை குரு பார்ப்பதால் மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகக் கையாளுங்கள். சனியும், ராகுவும் 3ம் வீட் டில் தொடர்வதால் எத்தனை பிரச்னைகள், சிக்கல்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் எதிர்ளீகொண்டு வெற்றி பெறும் சக்தி கிடைக்கும்.

அரசியல்வாதிகள் ஆதாரமில்லாமல் எதிர்க்கட்சியினரை தாக்கிப் பேசாதீர்கள். வழக்குகளை சந்திக்க நேரிடும். கோஷ்டிப் பூசலால் உங்கள் புகழ் குறையும். மாணவர்கள் அறிவியல், கணிதப் பாடத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் அரட்டைப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்கள் காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முயற்சியும் வேண்டாம். நண்பர்களிடம் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. கல்யாண முயற்சிகள் தடைபடும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களுடன் சின்னச் சின்ன பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் வங்கிக் காசோலை, டி.டி மூலமாக செய்வது நல்லது. உரிய ஆவணங்கள் இல்லாமல் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

அதிகாரிகளுடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும் என்றாலும் அநாவசியப் பேச்சுகளை குறைப்பது நல்லது. அதிகாரிகளுடன் வீண் விவாதங்களெல்லாம் வேண்டாம். சக ஊழியர்களுக்காக அதிகம் பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.கலைத்துறையினர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தள்ளிப்போகும். கிசுகிசுத் தொல்லைகளும் வரும். சக கலைஞர்களுக்குள் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.விவசாயிகள் பழைய கடனை நினைத்து கலங்காதீர்கள். பூச்சித் தொல்லை குறையும். நிதானமும், பொறுமையும் தேவைப்படும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 17, 18, 19, 27, 28, 29
ஜனவரி : 2, 3, 4, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 7, 8 ஆகிய திகதிகளில் அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம் : வைரவரை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.