கோர விபத்து
களுத்துறை – தொடங்கொடை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டி வேறு ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த பேருந்துடன் மோதியுள்ளது. சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
தொடங்கொடை பகுதியை சேர்ந்த 31 மற்றும் 35 வயதானவர்களே உயிரிழந்துள்ள நிலையில், விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதியும், முச்சக்கரவரண்டியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.






