அவதானம் : நாளையும் வடக்கில் கடும் வெப்பமான காலநிலை!!

654

கடும் வெப்பமான காலநிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றுமம் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் நாளைய தினம் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கோரியுள்ளது. மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும், இயன்றவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.