பற்றி எரிந்த வீடு
வீடொன்று திடீரென பற்றி எரிந்துள்ள சம்பவம் காலி – நியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் அவரது 3 வயது குழந்தையும் வாழ்ந்து வந்துள்ளனர். எனினும் தீப்பரவல் ஏற்படும் போது அந்த வீட்டில் எவரும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயினால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் அழிவடைந்துள்ள நிலையில், மின்சார கசிவினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.