யாழில் இருந்து திருகோணமலைக்கு சென்றவர் சடலமாக மீட்பு!!

304

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் தலை மற்றும் கால்களில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ். நான்காம் வட்டாரத்தை சேர்ந்த 74 வயதுடைய அந்தனிபாஸ் என்பவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் யாழிலிருந்து திருகோணமலைக்கு பேருந்தில் வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.