இலங்கையில் நாளை முதல் 4 மணிநேர மின்வெட்டு , சனி 2.15 மணிநேர வெட்டு : விபரம் உள்ளே!!

1388

மின்வெட்டு

நாள் தோறும் தினமும் இரண்டு தடவைமின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 8.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி அல்லது முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 2.30 மணி வரையில் அல்லது நண்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை மூன்று மணித்தியாலங்களும், மாலை 6.30 முதல் இரவு 7.30 வரையில் அல்லது இரவு 7.30 முதல் – இரவு 8.30 மணி வரையிலும் அல்லது இரவு 9.30 முதல் – இரவு 9.30 மணி வரையிலும் மின் தடை அமுல்படுத்தப்பட உள்ளது.

சனிக்கிழமை தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி காலை 8.30 முதல் பிற்பகல் 10.45 வரையும், முற்பகல் 10.45 முதல் பிற்பகல் 1.00 மணி வரையும் , பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 3.15 வரையும் , பிற்பகல் 3.15 முதல் பிற்பகல் 5.30 வரையும் மின்சார விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

எவ்வாறாயினும் ஞாயிற்று கிழமைகளில் மின்சார விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படாது என மின்சார சபை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது.

தொடர்சியாக நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.