இலங்கையில் நடந்துள்ள பயங்கர சம்பவம்!!

901

பயங்கர சம்பவம்

கொட்டாவ – லியனகொட பிரதேசத்தில் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவர் அவரது மனையின் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை மனைவியுடன் குறித்த வர்த்தகருக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மனைவி கத்தியினால் கணவருக்கு தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிலே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மனைவி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் தன்னை தாக்கியதினால் தான் கத்தியினால் தாக்கியதாக மனைவி காவற்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குறித்த பிரதேசத்தினை சேர்ந்த ஆடை வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு 03 பிள்ளைகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.