இளைஞருக்கு நேர்ந்துள்ள விபரீதம்
திருகோணமலையின் கந்தளாய் பிரதேசத்தில் மோட்டார்சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வடிகாணிற்குள் விழுந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று கந்தளாய் வெலிங்டன் வீதியில் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்றவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கந்தளாய் பகுதியை சேர்ந்த சுரேஸ் குமார் எனும் 20 வயது இளைஞரே பலத்த காயங்களுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது.
சுரேஸ் குமார் முள்ளிப்பொத்தானையிலிருந்து கந்தளாய் பகுதியிலுள்ள உறவினரின் வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







