ஜப்பானில் ஏற்பட்ட விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக பலி!!

549

இளைஞர் பரிதாபமாக பலி

ஜப்பானில் கல்வி கற்று வந்த இந்நாட்டைச் சேர்ந்த மாணவரொருவர் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கம்பஹா – கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த இசுரு அபேதீர என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஜப்பான் Utsunomiya orion பாடசாலையில் கல்வி கற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.