மன்னாரில் ஏழு வயதுச் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!!

738

சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

மன்னார் – நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 40 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நானாட்டான் பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

நானாட்டான் பகுதியில் தனது அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் சந்தேகநபர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் நானாட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.