புகையிரத விபத்து
கொழும்பில் இருந்து சென்ற ரயிலுடன் மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவின் தொடன்நுவர பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







