வவுனியாவில் கஞ்சா விற்பனை செய்த இருவருக்கு நேர்ந்த கதி!!

534

கஞ்சா விற்பனை

வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நேற்று குறித்த நபர்களை முன்னிலைப்படுத்திய போதே அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருவர் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக வவுனியா மதுவரி திணைக்களத்தினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.