காலநிலையில் மாற்றதால் பாரிய சவாலுக்கு மத்தியில் பொது மக்கள்!!

514

கடுமையான வறட்சி

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இன்றைய காலநிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய திடீர் காலநிலை மாற்றத்தால் பல மாவட்டங்களில் பொது மக்கள் குடிநீர் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக மாவட்ட செயலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வறட்சியில் பல சவால்களை எதிர் நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக 117 என்ற தொலைபேசி இலக்கமும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் இன்றி பாதிக்கப்படும் மக்களுக்கு பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடனும் அவர்களின் தேவைகள் முடியுமான வரை தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள அதே வேளை நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை களுத்துறையில் 50 ஆயிரம் குடும்பங்கள் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் கடல் நீர் தண்ணீருடன் கலந்திருப்பதால் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளனர்.

பல மாவட்டங்களுக்கு குடிநீர் தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 200 குடிநீர் தாங்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 8000 நீர் தாங்கிகளையும் தமது அமைச்சு வழங்கியுள்ளது.

காட்டுத்தீ தற்பொழுது பரவி வருகிறது என்றும் இது தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும். 24 மணித்தியாலமும் தற்போதைய நிலைமை தொடர்பில் இடர் முகாமைத்துவம் மத்திய நிலையம் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வறட்சியால் அதிக வெப்பத்தை தாக்கு பிடித்துக் கொள்ள முடியாமல் நேற்றைய தினம் முல்வைத்தீவு பகுதியை சேர்ந்த ஒரு இனைஞர் ஒருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.