யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!!

1154

பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணத்தில் மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் மின் கம்பம் உடைந்துள்ளது. இதனை சீரமைக்க சென்ற நபர் மீது கம்பம் வீழ்ந்துள்ளது. கரணவாய் வீரப்பிராய் பகுதியில் உள்ள வீதி வழியாக லொறி ஒன்றும் மகிழுந்து ஒன்றும் எதிர் எதிர் திசையில் வந்துள்ளன. வளைவு ஒன்றில் திரும்பும் போது, வீதியோரமாக நடப்பட்டிருந்த மின்சார, தொலைபேசி கம்பத்தில் லொறி வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

கம்பங்கள் முறிந்து லொறி மீது சாய்ந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பில் மின்சார சபை மற்றும் ஸ்ரீலங்கா ரெலிக்கொம் என்பவற்றுக்கு நெல்லியடி பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பணியாளர்கள் அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது லொறியில் சாய்ந்திருந்த மின்கம்பம் மின்சாரசபை ஊழியரின் தலை மீது விழுந்தது. மின்சார சபை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்