வவுனியாவில் உயிருக்கு போராடும் 15வயது பாடசாலை மாணவன் : உதவி செய்யுமாறு கோரிக்கை!!

2007

உயிருக்கு போராடும்  பாடசாலை மாணவன்

வவுனியா அண்ணாநகர் பாடசாலை வீதியினை சேர்ந்த 15வயதுடைய பாடசாலை மாணவன் எஸ்.சதீஸ்குமார் தான் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறு வயதினிலேயே தந்தையினை பிரிந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழும் குறித்த மாணவன் கடந்த சில வருடங்களுக்கு முன் பாடசாலையில் நடந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் போது மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது மாணவனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் அதிர்ச்சியான விடயமொன்றினை பெற்றோருக்கு தெரிவித்தனர். நுரையிரல் வால்வு காரணமாக நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிப்பக்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்யவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் வறுமை காரணமாக பலரிடம் சென்று அவர்கள் உதவிகளை கோரியபோதிலும் சிறியளவு பணமே அவர்களுக்கு கிடைத்துள்ளது. இம்மாதம் 19ம் திகதிக்கு முன்னராக குறித்த மாணவனுக்கு சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும்.

தனது மகன் உயிர்வாழ்வதற்கு உதவி செய்யுமாறு மாணவனின் தயார் கோரி நிற்கின்றார். நல்லுள்ளம் கொண்டவர்கள் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இச் செய்தியை அதிகம் பகிர்ந்து உயிரைக் காக்க உதவுங்கள்.

இலங்கை வங்கி
வவுனியா கிளை
பெயர் :- சீதாலட்சுமி
கணக்கு இலக்கம் :- 74559676

தொலைபேசி இலக்கம் :- 94772843362