வவுனியா மாணவர்கள் வடமாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையில் வரலாற்றுச் சாதனை!!

1305

அண்மையில் நடைபெற்றவட மாகாண விஞ்ஞான ஒலிம்பியாட் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வவுனியா தெற்கு கல்வி வலய மாணவர்கள் முதல் நான்கு நிலைகளை பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டியுள்ளார்கள்.

தேசியமட்ட பரீட்சைக்கு வட மாகாணத்தில் தெரிவு செய்யப்படும் முதல் 12 மாணவர்களில் 07 மாணவர்கள் வவுனியா தெற்கு கல்விவலய மாணவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இதில் முதலாம் இடத்தினை வவுனியா தமிழ் மத்திய ம.வி மாணவன் செல்வன் எம்.யதுர்சன், இரண்டாம் இடத்தினை இறம்பைகுளம் மகளிர் கல்லூரி மாணவி செல்வி ஜெ.சாகித்தியா, மூன்றாமிடத்தினை வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ். சன்சய்,

நான்காமிடத்தினை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி செல்வி ரி.கபிசா பெற்றுக்கொண்டதுடன் ஆறாமிடத்தை வவுனியா தமிழ் ம.ம.வி மாணவன் செல்வன் எஸ்.கரிஸ், பத்தாம் மற்றும் பதினோராம் நிலைகளை இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான செல்வி எஸ்.ஆரபி, செல்வி எஸ்.சப்தகி ஆகியோர் தமதாக்கி தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.

இவர்களை வவுனியா மாவட்ட விஞ்ஞான கள கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், வவுனியா தெற்கு கல்வி வலய விஞ்ஞான ஆசிரியஆலோசகர் இ.மாதவன், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம், மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்றுவித்திருந்தனர்.