வவுனியா பள்ளிவாசலுக்குள் பலத்த சோதனைக்குப் பின்னர் அனுமதி!!

510

வவுனியா நகரில் அமைந்து பெரிய பள்ளிவாசலுக்குள் இன்று (26.04.2019) மதியம் பொலிஸாரின் பலத்த சோதனைக்குட்படுத்தபட்டு அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இலங்கையிலுள்ள அனைத்து பள்ளிவாசலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா பெரிய பள்ளிவாசலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்கும் அனைவரும் பொலிஸாரின் பலத்த சோதனைக்கு பின்னரே உள்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தலைக்கவசம், பொதிகள், பைக் போன்றன பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததுடன் 15நிமிடங்கள் மாத்திரமே தொழுகையும் நடைபெற்றிருந்தது.

பள்ளிவாசலினை சூழவுள்ள பகுதிகளில் அதிகளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் அவ்விடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் இரானுவத்தினர் தடை விதித்திருந்தனர்.