வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களிற்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை!!

1043

தொடர் குண்டுவெடிப்பில் மரணித்த பொதுமக்களின் ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாடும் அஞ்சலி நிகழ்வும் வேப்பங்குளம் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இன்று (28.04.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

மரணித்த உறவுகளுக்கு சாந்தி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி மரணித்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தனர்.

இவ் ஆத்மசாந்தி மற்றும் அஞ்சலி நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அருட்சகோதரி, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.