வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆத்ம சாந்திபிப் பிரார்த்தனை!!

1163

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டியும் காயமடைந்தவர்கள் குணமடைய வேண்டியும் வவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை இன்று(28.04) காலை இடம்பெற்றது.

ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இப்பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய நினைவுத்தீபம் பொதுமக்களால் ஏற்றப்பட்டதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலய பரிபாலன சபைத்தலைவர் எஸ்.வசீகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா அந்தணர் ஒன்றிய ஆலோசகரும் போசகருமாகிய முத்து.ஜெயந்திநாதக்குருக்கள் ஆலய குரு கந்த.துஷியந்த குருக்கள் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவ.கஜேந்திரகுமார் கிராம அலுவலர் பரராஜசிங்கம் பரிபாலன சபையினர் பொதுமக்கள் அறநெறி மாணவர்கள் கலந்து கொண்டனர்.