வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொள்ள வேண்டாம் : நகரசபை அறிவுறுத்தல்!!

537

வவுனியா நகரின் முக்கியபகுதிகளில் நடைபாதைகளில் வியாபாரம் மேற்கொள்ள வேண்டாம் என வவுனியா நகரசபை அறிவித்துள்ளது.

குறிப்பாக இலுப்பையடி, மற்றும் சந்தை சுற்றுவட்ட வீதி ஆகியபகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேறகொள்ளும் வர்தகர்கள் நாட்டின் அசம்பாவித நிலை கருதி வியாபார நடவடிக்கைகளை நிறுத்துமாறு வவுனியா நகரசபையால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்த போது, அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகரின் முக்கிய பகுதிகளில் நடைபாதை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அதிக நெரிசலான நிலை ஏற்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக பொலிசாரும் எமக்கு தெரியப்படுத்தியிருந்தனர். எனவே நாட்டின் தற்போதைய நிலை சீராகும் வரைக்கும் நடைபாதை வியாபாரிகள் முக்கிய பகுதிகளில் தரித்து நின்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுத்துள்ளோம்.

இது அனைவரது பாதுகாப்பு கருதி எடுக்கபட்ட முடிவு என்றும் நாட்டு நிலமை சீரானதன் பின்பு நடைபாதை வியாபாரிகள் தொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்கபடும் என்று தெரிவித்தார்.