வவுனியாவில் இந்து ஆலயம் உட்பட தமிழர்களின் பகுதிகளில் தீவிர சோதனை நடவடிக்கை!!

674

வவுனியாவில் இன்று(02.05) காலை 7மணிமுதல் 9மணிவரையும் கோவில்குளம், கோவில்புதுக்குளம் ஆகிய பகுதிகளிலும் அப்பகுதியிலுள்ள இந்து ஆலயம், ஒன்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படையினரும் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்போது வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து நாடு திரும்பிய 40வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வவுனியா கோவில்குளம், கோவில்புதுக்குளம் பகுதிகளில் இன்று காலை முதல் பொலிசாரும் படையினரும் இணைந்து சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனார். இதன்போது அப்பகுதியிலுள்ள இந்து ஆலயத்திலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய கிழக்கு நாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இராணுவ சீருடையை ஒத்த ஆடை ஒன்றும் வயர் துண்டுகளும் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்பகுதியில் வீதியால் சென்ற வாகனங்களையும் பொதுமக்களையும் வழிமறித்து தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது காலை 7மணிமுதல் 9மணி வரை அப்பகுதியில் நூற்றிற்கும் மேற்பட்ட படையினருடன் பொலிசாரும் இணைந்து சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

அண்மைய காலங்களாக வவுனியாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில் இன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கும் இந்து ஆலயத்திலும் இச்சோதனை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.