வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் திடீர் சோதனை!!

879

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நாளைய தினம் ஆரம்பப் பாடசாலை தவிர்ந்த அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றையதினம் வவுனியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டங்கள் அனைத்தும் தீவிர சோதனையிடப்பட்டதோடு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் சோதனையிடப்பட்டது.