வவுனியாவில் பிறந்தநாளில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்!!

883

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் இன்று (10.05.2019) காலை 8.30 மணியளவில் 24 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய சிவலிங்கம் நிரோஜன் இளைஞன் அவரது 24 வது பிறந்ததினத்தினை நேற்றையதினம் அவரது இல்லத்தில் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் முடிவடைந்ததன் பின்னர் வீட்டின் அவரது அறையில் உறங்குவதற்கு சென்றுள்ளார். இன்று காலை குறித்த இளைஞனின் தாயார் மகளை எழுப்புவதற்கு சென்ற சமயத்தில் தூக்கில் தொங்கியநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதினையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.