வவுனியா செட்டிகுளத்தில் டயரினை எரித்த நபரினால் பதற்றம் : ஒருவர் கைது!!

970

வவுனியா செட்டிகுளத்தில் வீதியில் நபரொருவர் நேற்றையதினம் (11.05.2019) இரவு 10 மணியளவில் டயரினை எரித்தமையினால் அவ்விடத்தில் சற்று பதற்றநிலை காணப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் பொலிஸார் செட்டிக்குளம் முதலியார்குளம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

மதுபோதையின் உச்சத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.