வவுனியாவில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் கைது!!

1037

இளைஞன் பொலிசாரால் கைது

வவுனியாவில் இளைஞரொருவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் நேற்று மாலை வவுனியா நகரிலிருந்து மன்னாருக்கு செல்லும் பிரதான சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள எரிபொருள் நிலைய பகுதியில் தனிமையில் நின்ற இளைஞரொருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிரு்நது 750 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின் இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.