வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22ம் திகதி ஆரம்பம்!!

1078

யாழ் பல்கலைக்கழத்தின் வவுனியா வளாகத்தின் கற்றல் நடவடிக்கைகள் 22 ஆம் திகதி புதன் கிழமை ஆரம்பமாகவுள்ளதாக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என உயர் கல்வி அமைச்சு அறிவித்தல் வழங்கியிருந்த நிலையில் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளையும் ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் பிரயோக விஞ்ஞானபீடம் மற்றும் வர்த்தக பீடங்களின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் விடுதியில் தங்கியுள்ள மாணவாகள் 21 ஆம் தகிதி காலை 9 மணியில் இருந்து 3 மணிவரை வருகை தரமுடியும் எனவும் வளாக முதல்வர் தெரிவித்துள்ளார்.