வவுனியாவில் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாள்!!

584

வவுனியாவில் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்று சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சங்கிலிய மன்னனின் ஆத்ம சாந்தி கிரியைகள் இடம்பெற்றதுடன் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மேலும் தமிழ் மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவுநாள் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிதம்பரபுரம் பழனி முருகன் ஆலய தலைவர் அ.மாதவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆலய குருக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.