காட்டில் உணவின்றி 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட பெண் : பின்னர் நடந்த அதிசயம் என்ன தெரியுமா?

535

நடந்த அதிசயம்

அமெரிக்காவில் காட்டில் பெண்ணொருவர் 17 நாட்கள் தனியாக சிக்கி கொண்ட நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ஹவாய் மாகாணத்தைச் சேர்ந்தவர் அமண்டா எல்லெர் (35). யோகா பயிற்சியாளரான இவர் கடந்த 8-ம் திகதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு காரில் சென்றிருக்கிறார்.

பின்னர் அங்கு ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அவர் திரும்பவேயில்லை. அமண்டாவை அவர் குடும்பத்தார் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் மற்றும் பணப்பையை அவர் காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது.

அமண்டாவை 1000-க்கும் மேற்பட்டோர் தேட தொடங்கியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் குடும்பத்தார் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்து தேடிய நிலையில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அமண்டா உயிருடன், நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமர்ந்திருப்பதை மீட்புக் குழுவினர் கண்டதும், அவரைப் பத்திரமாக மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். கால்களில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.

17 நாள்கள் காட்டுக்குள் இருந்த அந்த பதற்றமான நொடிகளையும், சாப்பிட உணவில்லாமல் இலைகளை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்ததையும் அமண்டா கண்ணீரோடு வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.