வவுனியா பெரிய பள்ளிவாசலில் பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் இஃப்தார் நிகழ்வு!!

709

இஃப்தார் நிகழ்வு

பலத்த இராணுவ பாதுகாப்பிற்கு மத்தியில் வன்னி பிராந்திய இராணுவத்தினரின் ஒழுங்கமைப்பில் வவுனியா பெரிய பள்ளிவாசலில் இன்று (30.05.2019 மாலை இஃப்தார் நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் வவுனியா பெரிய பள்ளிவாசலில் ஆரம்பமான இஃப்தார் நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மக்களோடு மக்களாக கலந்துகொண்டனர்.இதன் போது சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் நினைவுப்பரிசில் வழங்கல், நோன்பு திறத்தல் என பல்வேறு விடயங்கள் இடம்பெற்றிருந்தன.

இந் நிகழ்வில் வன்னிப்பிராந்திய இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸார், தமிழ் சிங்கள் முஸ்ஸிம் பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். முஸ்ஸிம் சமூகத்தினரை இராணுவத்தினர் அன்புடன் வரவேற்று பலவகை உணவுப்பொருட்களை வழங்கி உபசரித்தனர்.