பெரியசாமி முகுந்தன்

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மற்றுமோர் வவுனியா இளைஞன் இன்று அதிகாலை அனுராதபுரம் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு சென்று மீண்டும் வவுனியா நோக்கி ஹயஸ்ரக வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்த போது குறித்த வாகனம் நொச்சியாகம பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்த வவுனியா தவசிகுளத்தினை சேர்ந்த 23 வயதான விஜயகுமார் தனுசன் என்ற இளைஞன் மரணடைந்திருந்ததுடன்,

வாகனத்தில் பயணித்த மேலும் நால்வர் காயமடைந்துள்ள நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் படுகாயமடைந்திருந்த வவுனியாவைச் சேர்ந்தந்த ஆசிரியரான 32 வயதுடைய பெரியசாமி முகுந்தன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.





