வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு!!

492

மரக்கடத்தல்

வவுனியா மரக்காரம்பளையில் இன்று (31.05) அதிகாலை 1மணியளவில் மரக்கடத்ததில் ஈடுபட்டவர்களை பொலிசார் வழிமறித்து மரக்கடத்தல் முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் இன்று அதிகாலை தாண்டிக்குளம் மரக்காரம்பளை வீதியில் ஓமந்தை பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதிமிக்க முதிரைக் குற்றிகள் 11 டாட்டா ரக வாகனத்தில் எடுத்துச் சென்றபோது வாகனத்தை வழிமறித்த பொலிசார் வாகனத்தை நிறுத்தாது சாரதி வேகமாகச் செலுத்தியுள்ளார்.

வாகனத்தை விரட்டிச் சென்ற பொலிசார் வழிமறித்தபோது வாகனத்தை கைவிட்டு சாரதி தப்பிச் சென்றுள்ளார். வாகனத்தின் உதவியாளர்கள் இருவர் உட்பட முதிரைக் குற்றிகளைக் கைப்பற்றிய பொலிசார் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன்,

தப்பிச் சென்ற வாகனச் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.