வவுனியா கொமர்சல் வங்கியின் சிறப்பான செயற்பாடு!!

829

வவுனியா கொமர்சல் வங்கி

கொமர்சல் வங்கி சமூகப்பொறுப்பு நிதியத்தின் பங்களிப்புடன் கொமர்சல் வங்கி வவுனியா கிளை மூலமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நடும் வைபவம் நேற்று(06.06.2019) “உலகிற்கு உயிரூட்டும் மரத்திற்கு உயிரூட்டுவோம்” எனும் தலைப்பில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா கொமர்சல் வங்கி அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்குபற்றினர்.

கொமர்சல் வங்கியின் இது போன்ற சமூகப்பணிகள் கடந்த காலங்களிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.