வவுனியாவில் கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு : 108 தேங்காய் உடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு…!

411

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்த கோரி நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் நாளை 108 தேங்காய் உடைக்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், பொது அமைப்புகளும் இணைந்து கல்முனையில் இடம்பெறும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் காலை 7.30 மணிக்கு இடம்பெறவுள்ள 108 தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.