கார் வாங்கிதர கோரி தொடர்ந்து துன்புறுத்திய மருமகன் : மகள் எடுத்த விபரீத முடிவு!!

466

வரதட்சனை கேட்டு பெண்ணிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. 32 சவரன் நகையோடு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களும் சீதனமாக கொடுக்கப்பட்ட நிலையில், கார் வாங்கித் தரக்கேட்டு தன்னை தினமும் துன்புறுத்துகின்றனர் என்று ராசாத்தி அடிக்கடி தனது தந்தையிடம் கூறிவந்துள்ளார்.

இந்த நிலையில் தான் செவ்வாய்கிழமை மாலை ராசாத்தி இறந்துவிட்டதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரசாத்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் உறவினர்கள் உடலை வாங்க சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொலிசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் கலைந்து சென்றனர்.