வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினரின் சோதனைச்சாவடி அகற்றம்!!

538

சோதனைச்சாவடி அகற்றம்

வவுனியா இறம்பைக்குளத்தில் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயம் அமைந்துள்ள பகுதியில் ஹொரவப்பொத்தானை வீதியில் இராணுவத்தினர் இச் சோதனைச்சாவடியை அமைத்து சந்தேகத்திற்கிடமான வாகனங்களை கடும் சோதனைக்குட்படுத்தி வந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் சீரான நிலமையினையடுத்து இன்று (27.06.2019) காலை இச் சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியாவிலுள்ள பெரும்பாலான சமய வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பேரூந்து நிலையம், வங்கிகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இடம்பெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து வன்னிப் பிராந்திய இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் வவுனியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது நாட்டில் சீரான நிலை காணப்படுவதினால் சோதனைச்சாவடிகளை அகற்றுமாறு எமக்கு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் இவற்றினை அகற்றுவதாக சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் தெரிவித்தார்.