வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் சஞ்சிகை வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!!

755

வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் வித்துவம் சஞ்சிகை வெளியீடும், பரிசளிப்பு விழாவும் இன்று (02.07.2019) இடம்பெற்றது.

படசாலையின் அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்வி, விளையாட்டுக்கள் உட்பட பல்வேறு மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

முதலாவது வித்துவம் சஞ்சிகையை வவுனியா மாவட்டச் செயலர் ஐ.எம்.கனீபா வெளியீடடு வைத்தார்.

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வளாக முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.