வவுனியாவில் தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சிக் கருத்தரங்கு!!

485

பயிற்சிக் கருத்தரங்கு

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முன்னோடி பயிற்சிக் கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (03.07.2019) இடம்பெற்றது.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் வீ.கனகசுந்தரம் நெறியாள்கையில்இடம்பெற்ற இக் கருத்தரங்கில் 2019ம் ஆண்டு 2ம் பிரிவுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், கணணி வன்பொருள் திருத்துநர், கணிணி பட வரைஞர், தையல், மின்னியலாளர், அழகுக் கலை மற்றும் சிகையலங்காரம், காய்சி இணைப்பவர், அலுமினியம் பொருத்துநர் போன்ற பல்வேறு பயிற்சி நெறிகளில் ( NVQ-3, NVQ-4 ) பயிலவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் அனைத்து பயிற்சி நெறிகளும் இலவசமாக கற்பிக்கப்படுவதுடன் தூர தேசங்களிலிருந்து கற்கை நெறியினை தொடருகின்ற மாணவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.