யாழில் இனம் தெரியாத கும்பலொன்று உடமைகளை சேதப்படுத்திவிட்டு தப்பியோட்டம்!!

323

யாழில்..

யாழ்ப்பாணம் – கச்சேரி வீதி மூத்த நாயகர் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இனம் தெரியாத கும்பலொன்று புகுந்து உடமைகளை சேதப்படுத்தி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 நபர்கள் குறித்த வீட்டுக்குள் புகுந்து கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.