கர்ப்பிணியான தனது மனைவியை..

கர்ப்பிணியான தனது மனைவியின் கழுத்தை நெ ரித்து கொ லை செய்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (24.07) அதிகாலை பதுளை – ஸ்பிரிவேலி தோட்டம், முதலாவது பகுதியில் உள்ள வீட்டில் இந்த கொ லைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரான கணவர், கொழும்பில் பணிபுரிந்து வருவதோடு, அண்மையில் வீட்டுக்கு சென்றிருந்த போதே இந்த கொ லை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல் கிடைத்ததுடன்,

அவர் யாழ்ப்பாணம் பகுதியில் நபரொருவருடன் தொடர்பை பேணி வருவதாக தகவல் கிடைத்தமையால் மனைவியை கொ லை செய்ததாக கணவர், காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கொ லை செய்யப்பட்டுள்ள பெண்ணின் கையடக்க தொலைபேசியை காவல்துறை கைப்பற்றியுள்ளதோடு, சம்பவம் தொடா்பில் பதுளை காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




