போராட்டம்

படை வீரர் ஒருவரையும் தண்டிக்கமாட்டேன் என்று கூறும் அரசு எங்களுக்கு எப்படி நீதி வழங்கும் என தெரிவித்து வவுனியா மாவட்ட வலிந்து கா ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(30.07.2019) காலை கவனயீர்ப்பு போ ராட்டம்
ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கையிலே ஒப்படைத்தவர்களை திருப்பித் தருவது தானே நியாயம் அதற்கு ஏன் ஒ.எம்.பி அலுவலகம் , எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும் , ஏமாற்றாதே ஏமாற்றாதே கா ணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளை ஏமாற்றாதே , சர்வதேசமே எங்கள் பிள்ளைகளை இ ரகசிய மு காம்களில் இருந்து மீட்டுத்தா,

படை வீரர் ஒருவரையும் த ண்டிக்கமாட்டேன் என்று கூறும் அரசு எங்களுக்கு எப்படி நீதி வழங்கும் போன்ற பல்வேறு வாசகங்ளை தாங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இக் கவனயீர்ப்பு போ ராட்டத்தில் 50க்கு மேற்பட்ட கா ணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டு க ண்ணீர் மல்க பலத்த கோசங்களை எழுப்பி போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





