சுவிஸ்லாந்திற்கு சுற்றுலா சென்ற இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்!!

682

இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்

சுவிஸ்லாந்திற்கு சுற்றுலா சென்ற இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடகிழக்கு சுவிஸ் நகரமான St Gallen பகுதியில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கியே 22 வயதான இலங்கையர் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது குளத்தில் இறங்கிய இலங்கையரை கா ணவில்லை என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக குளத்தில் இறங்கி அந்த நபரை தேடியுள்ளனர். அத்துடன், அவசரகால மீட்பு நடவடிக்கை குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும், 30 நிமிடங்களுக்கு பின்னர் கா ணாமல் போன நபர் ச டலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் ச டலம் கரையில் இருந்து 3 தொடக்கம் 4 மீற்றர் தூரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையின் போது உ யிரிழந்த நபருக்கு நீச்சல் தெரியாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அவர் தனியாக குளத்தில் இறங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து St Gallen பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சுவிஸ்லாந்தில் கடந்த 2018ம் ஆண்டு 37 பேரும், 2017ம் ஆண்டு 41 பேரும் நீரிழ் மூழ்கி உ யிரிந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.