குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்ற தமிழர்!!

481

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமத்தினை சேர்ந்த திருச்செல்வம் விமுக்தி என்பவர் குடிவரவு குடியகல்வு அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார்.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்று எருவில் கல்வி பயின்றவரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பகுதியை சேர்ந்த ஒருவர், அதிலும் தமிழர் ஒருவர் இவ்வாறான பதவியில் தெரிவுசெய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரினாலும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.