இரு வேறு முறைப்பாடுகள்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், பெண்கள் வேலை புரியும் இடத்தில் தகாத வார்த்தை பிரயோகங்களை பாவித்ததாகவும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கட்டிட அனுமதிக்காக நபர் ஒருவர் கொடுத்த வரைபடம் தவறாக இருந்ததால் அனுமதிக்கான தாமதத்திற்கு காரணமாக இருந்தது.

எனினும் இன்று அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதென பிரதேச சபையினரால் 3 மணியளவில் தொலைபேசியில் அழைக்கப்பட்ட போதே இவ்வாறாக நடந்து கொண்டதாக தெரிவித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த நபர் அரச சுற்றுலா விடுதியில் பணிபுரியும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் தாக்கியதாக மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் அரச ஊழியர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஇன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா மாவட்ட செயலகத்தின் விடுதி காப்பாளராக பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வீடு மற்றும் மதில் என்பவற்றினை அமைப்பதற்கான அனுமதிக்காக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு சென்றுள்ளார்.
குறித்த அனுமதிக்காக விண்ணப்பித்து ஒரு வருடங்கள் நிறைவடையும் நிலையில் இன்றைய தினமே குறித்த அனுமதி கிடைத்திருந்தது.
அதனை பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவரிடம் பெற்றுக் கொண்ட போது இவ் அனுமதிக்கு ஏன் ஒரு வருடம். உங்களது செயற்பாடுகள் மந்தமாகவே நடைபெறுவதாக குறித்த நபர் உத்தியோகத்தரிடம் கூறியுள்ளார்.
இதன்போது தனது தனது செல்வாக்கை பயன்படுத்தி வேலையைஇல்லாமல் செய்விப்பேன் என மிரட்டியதாக, குறித்த நபர் தவிசாளருக்கு எதிராக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




