யாழில் இரவில் நடந்த விபரீதம் : கடைகள் தீயில் எரிந்து நாசம்!!

685

கடைகள் தீயில் எரிந்து நாசம்

தென்மராட்சி – சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட ஏ-9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றில் தீப்பற்றி எரிந்துள்ளது. இத்தீ விபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது.

விபத்தையடுத்து யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.