வீதியில் சென்ற இளம் பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி!!

304

பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை – அக்போபுர பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே தங்கச் சங்கிலி அபகரிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதினெட்டு வயதுடைய இளம் யுவதியொருவர் மோட்டார் சைக்கிளில் அக்போபுர பகுதியிலிருந்து, கந்தளாய் நகருக்கு தேவை நிமித்தமாக சென்ற வேளை பின்னால் மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியபடி வந்த இருவர் பெண்ணின் இரண்டு பவுனுடைய தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவித்துள்ளனர்.